Monday, September 5, 2011

2. பிரபஞ்சம்


           
2. பிரபஞ்சம்

                ``அக, புற, பிரபஞ்ச ஆற்றலை உணர்ந்தவர் பூரணமாக வாழ்கின்றார்’’.

                பிரபஞ்சம் என்றழைக்கப்படுவது சூரியன், பூமி, சந்திரன் மற்றும் பல கிரகங்களும், பல நட்சத்திரக் கூட்டங்களும் அடங்கிய ஒரு மிகப் பிரம்மாண்டமான அமைப்பே ஆகும். நாம் கண்ணால் காணும் கிரகங்கள் மட்டுமல்ல, காணமுடியாத பல சூரிய குடும்பங்களும், பல நட்சத்திரங்களும் இப் பிரபஞ்ச சக்தியால் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

                இப்பிரபஞ்சத்தில் எல்லாமே ஒரு ஒழுங்கு முறையாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்வாழும் சகல ஜீவராசிகளும், ஐம்பெரும் பூதங்களில் வாழ்கின்றன. இதுபோல பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களின் உடல் இயங்கும் முறைகள் எல்லாம் விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டதாக ஒரு சீரிய இயக்கமாக இருக்கின்றன.

                பிரபஞ்சம் எதையும் ஒரு முன் மாதிரியாகப் பயன்படுத்துவதில்லை. உயிரினங்களை மேம்படுத்துவதில் அது நாட்டம் கொண்டுள்ளது. மிகச் சிறந்த உயிரினங்களை உருவாக்க அது முயன்று கொண்டு உள்ளது. அதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை.

                பிரபஞ்ச இயக்கம், உலக இயக்கம், இயற்கையின் இயக்கம் எல்லாம் முறைப்படி அமைந்திருக்கின்றன. நம் வாழ்க்கையும் முறைப்படி சீரிய சிந்தனையை அடைந்தால் சிக்கல் இல்லாமல் வாழலாம். இந்த உயரிய சிந்தனைகளால் பிரபஞ்சத்தின் தன்மை உணர்ந்து இயற்கையின் ஒழுங்கை மீறாமல், எவ்வளவு தேவையோ அவ்வளவையும் பெற்றுக் கொள்ளலாம். ஒழுங்கு என்ற வரம்பு குறையாதிருந்தால் ஒவ்வொருவரும் பெறும் மிகுந்த அளவு பயன்கூட மற்றவர்கட்குத் தீங்கை ஏற்படுத்தாமலிருக்கும்.

                பிரபஞ்ச அறிவுதான் ஆறாவது அறிவை கடந்த அறிவாகும். பிரபஞ்சம்தான் நாம் புறப்பட்ட இடம். இந்த இடத்தை நோக்கியே எல்லா மூலப் பொருள்களும் ஈர்க்கப்படுகின்றன. அதனால் பிரபஞ்ச சக்தி அனைத்து உயிரினங்களிலும் இயல்பாய் அமைந்துள்ளன. இதன் இயல்புத் தன்மையை ஒட்டியே ஒவ்வொரு உயிரினமும் வாழ்கின்றன. அதனால் தான் பிறந்த இடம் நோக்கி ஓடும் ஓர் ஆன்மீக தாகம் மனித இயல்பாகி நம்மிடம் அமைந்திருக்கின்றது. பிரபஞ்ச அறிவைக் கொண்டு இதன் தொடர்பை நாம் அடைய முடியும். இதனால் பிரபஞ்ச இயல்பை நம் பரிணாம வளர்ச்சிக்குப் பயன்படுத்த முனையலாம். இது நம் எண்ணங்களிலும், உடலிலும் ஒரு நிம்மதி-மகிழ்ச்சி ஏற்படச் செய்கிறது.

                பிரபஞ்சத்திலுள்ள கோள்களை இணைத்திருப்பது ஈர்ப்புச் சக்தி. மனித உலகை இணைத்திருப்பது நிலையான இயல்பெனும் இயல்புணர்வு என்னும் ஈர்ப்புச் சக்தி. அதன் மூலம் நாம் பிற ஜீவன்களைத் தொடலாம். மூலத்தைத் தொடலாம். இதுதான் உலகை-பிரபஞ்சத்தை ஆளும் சக்தியாகும்.

                இயல்புணர்வு உங்கள் வாழ்க்கை உண்மை நிலையாக ஆகும் போது நம் அனைவராலும் உருவாக்கப்பட்ட சிக்கலான இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்வது மிகவும் எளிதாகி விடும். மனிதனைத் தவிர வேறு உயிரினங்கள் உணரும் இயல் புணர்வைப் பெற்றிருக்கின்றன என்பதை நாம் அறிதல் வேண்டும். இயல்புணர்வு இயக்க வேகத்திற்கு ஏற்ப தூரத்திலுள்ள பொருள்களை உணர்கிறது. அல்லது அறிந்து கொள்கிறது.

                பிரபஞ்சம் உயிரினங்களை மேம்படுத்துவதில் நாட்டம் கொண்டுள்ளது. சிறந்த உயிரினங்களை உருவாக்க அது முயன்றுக் கொண்டுள்ளது. அதை அறிந்து கொள்ளவில்லை, மனித உயிரினத்தின் வடிவில் பிரபஞ்சம் உருவாகியுள்ளது. இயல்புணர்வை உணரும் தன்மை கிடைத்துள்ளது. இதை நினைவில் கொண்டு செயல்பட்டு மேன்மையடைய வேண்டும்.

                பிரபஞ்சத்தின் எதிர்காலத்தைக் கணிப்பதைவிட பிரபஞ்சத்தின் அடிப்படை உண்மைகளை அறிய வேண்டும். அப்படி அறிந்து நம் அன்றாட வாழ்க்கையை நிகழ்காலத்தில் அமைத்துக் கொள்வோமானால் எப்போதுமே மகிழ்ச்சியாக வாழலாம்.

                ``இயல்புணர்வுகளின் இயக்க வேகத்தை அதிகரிக்க செய்து, இலக்கைப் பற்றிய பயணத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் பிறப்பின் நோக்கத்தை விரைவு செய்கிறது’’.


No comments:

Post a Comment